ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

இன்று !

மஹா மந்திரங்கள்
கணபதி மந்திரம் ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய வரத மூர்த்தயே நமோ நம: --> ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா -->சுப்ரமண்யர் மூலமந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் வ்ரீம் ஸெளம் சரவணபவ--> ஐயப்பன் மூலமந்திரம் ஓம் ஹ்ரீம் அரஹர புத்ராயா, சர்வலாபாயா சத்ரு நாஸாயா மதகஜ வாகனாயா மஹா சாஸ்த்ரே நமஹ-->நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ
OM Bhur-Bhuvah-Svah. Tat savitur varenyam bhargo devasva dhimahi. Dhiyo yo nah pracodayat. ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும்09092777195
ஸ்ரீ சுபமஸ்து
சுபமஸ்து-->நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ!!!

கொன்றை வேந்தன்



கொன்றை வேந்தன் ( ஆசிரியர்: ஒளவையார் )


கடவுள் வாழ்த்து:

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தரும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழகு
13. அ·கமும் காசும் சிக்கெனத் தேடு

14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
15. காவல்தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதியன் வெட்டன மற
17. கீழோராயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் அம்பாயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி
24. கோட்செவிக் குறமை காற்றுடன் நெருப்ப
25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை

26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கு அழகு சூழ விருந்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் முதிர்ந்தால் கைதவம் மாளும்
33. சேமம் ப
34. சையத்திருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போர முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. து¡ற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
44. தேடாது அழிக்கின் பாடா முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுது¡ண் சுவையின் உழுது¡ண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல்

48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு
52. நுண்ணிய கருமம் எண்ணித் துணி
53. நு¡ல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீராகாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61. பிறன் மான புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணி பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும்
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
69. போகனம் என்பது தான் உழந்து உண்டல்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையு ம்
75. மூத்தோர் சொல் வார்த்ரை அமிர்தம்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77. மேழிச் செல்வம் கோழை படாது
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80. மோனம் என்பது ஞான வரம்பு

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்
82. வானம் கருக்கின் தானம் சுருங்கும்
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
88. வேந்தன் சீறின் ஆம்ருணை இல்லை
89. வையந் தோறும் தெய்வந் தொழு
90. ஒத்த இடத்து நித்திரை செய்
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்

வாஸ்து நாள் நேரம்
சித்திரை 10 காலை 08.54 முதல் காலை 09.30 வரை
வைகாசி 21 காலை 09.58 முதல் காலை 10.34 வரை
ஆடி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
ஆவணி 6 காலை 07.23 முதல் காலை 07.59 வரை
ஐப்பசி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
கார்த்திகை 8 காலை 11.29 முதல் காலை 12.05 வரை
தை 12 காலை 10.41 முதல் காலை 11.17 வரை
மாசி 22 காலை 10.32 முதல் காலை 11.08 வரை
பார்த்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்!!!
free counter free counters visitors by country counter Locations of visitors to this page

Enter your email address:

உங்கள் Email Id பதிவு செய்க:

Delivered by: FeedBurner

2012-13ALL RIGHTS RESERVED. POWERED BY: அண்ணாமலை ஜோதிடம்-கும்மிடிப்பூண்டி SankarGurukkal ngpd

IN- CHENNAI - NGPD

 
back to top back to top

ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!